000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a பத்தராய்ப் பணிவார் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் பாடியுள்ள ஒன்பது தொகையடியார்களுள் ஒரு வகையினர் பத்தராய் பணிவார்கள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சுந்தரர் தம் திருத்தொண்ட தொகையில் 60 தனியடியார்களையும், ஒன்பது தொகையடியார்களையும் குறிப்பிட்டுள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு கூட்டத்தினர் அல்லது குழுவினைத் தொகுத்துச் சுட்டுவதைத் தொகை அடியார்கள் என்பர். தொகையடியார்கள் ஒன்பதின்மர் தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை இல்லாத புலவர், பத்தராய்ப் பணிவார்கள், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன் பால் வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார், முழு நீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார் ஆகியோர் ஆவர். இவர் இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வேறு பலரையும், தம் காலத்துக்கு முன்பும், பின்பும் வாழ்ந்தவர்களையும், வரவிருப்பவர்களையும் போற்றும் நோக்கில் தொகையடியார் வணக்கத்தைச் சுந்தரர் மேற்கொண்டுள்ளார். வரலாற்று எல்லைக்குள் உட்படாதவர்களையும், சிறப்பிக்கும் சுந்தரரின் இப்பண்பு பெருஞ்சிறப்புக்கு உரியது. இச்சிற்பத்தில் பத்தராய் சிவபெருமானை பணிபவர்கள், இரு கை கூப்பியும், தலைக்கு மேல் கைகளை உயர்த்தி வணங்கியும் காட்டப்பட்டுள்ளனர். சிவனடியார்கள் நெற்றியில் உருத்திராக்கப் பட்டையும், கழுத்திலும், கைகளிலும் உருத்திராக்கத்திலான அணிகளை தரித்துக் கொண்டு, எளிய அரையாடை அணிந்தவராய் சித்தத்தை சிவன் பால் வைத்தவராய் சிவ வழிபாட்டில் ஆழ்ந்துள்ளனர். |
653 | : | _ _ |a தொகையடியார், பத்தராய்ப் பணிவார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.94856342 |
915 | : | _ _ |a 79.35650614 |
995 | : | _ _ |a TVA_SCL_000344 |
barcode | : | TVA_SCL_000344 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |